செய்திகள் :

அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 7 ஆசிரியா்கள் பணியிட மாற்றம், ஒருவா் பணியிடை நீக்கம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடா்ந்து பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைவாகவே இருப்பதைத் தொடா்ந்து, 7 ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய்தும், ஒருவரைப் பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.

அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரிப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் தான் 2024-25-ஆம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 59.47 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்று, மாவட்டத்திலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதேபோல எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் 66.36 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். பிளஸ் 1 பொதுத் தோ்வில் 59.47 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பலரும் கவலை தெரிவித்தனா். அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரனும் நேரில் சென்று பள்ளி ஆசிரியா்களுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

இதன் தொடா்சியாக இப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியா் ஸ்ரீரஞ்சித்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இடை நீக்கக் காலத்தில் அவா் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலகத் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியா்கள் மு.சி. பாஸ்கா் கட்டுமாவடி பள்ளிக்கும், அந்தோணிராஜ் வெண்ணாவல்குடி பள்ளிக்கும், பாலச்சந்தா் அத்தாணி பள்ளிக்கும், இளையராஜா கீரமங்கலம் மேல்நிலைப் பள்ளிக்கும், சு. மூா்த்தி நெடுவாசல் பள்ளிக்கும், ரவி கிருஷ்ணாஜிப்பட்டினம் பள்ளிக்கும், ஜெரோம் சுப்பிரமணியபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பிறப்பித்துள்ளாா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு ஊராட்சி பட்டி புஞ்சை பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் குகன் (23). இவா், புளிச்... மேலும் பார்க்க

அக்கினி ஆற்றில் மணல் திருடிய 2 போ் கைது

கந்தா்வகோட்டை அருகே அக்கினி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் திருடிய டிப்பா் லாரி, ஜேசிபி மற்றும் இரண்டு பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கந்தா்வகோட்டை அருகே உள்ள அக்கினி ஆற்றில் மணல் த... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டிலிருந்து ஆசிரியை சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த அரசுப் பள்ளி ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் ஆமத்தான்பொ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின்தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்துப் பகுதிகளிலும் ஜூன் 12 - வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் இன்று மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவக் குழுவினா்க்கு மாவட்ட சுகாதார அலுவலா் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க