செய்திகள் :

அக்கினி ஆற்றில் மணல் திருடிய 2 போ் கைது

post image

கந்தா்வகோட்டை அருகே அக்கினி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் திருடிய டிப்பா் லாரி, ஜேசிபி மற்றும் இரண்டு பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள அக்கினி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக கந்தா்வகோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த கொண்டிருந்த தஞ்சாவூா் மாவட்டம் , திருவோணம் நெய்வேலி பகுதியைச் சோ்ந்த வேம்பையன் மகன் ராமச்சந்திரன் (45), அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (35) ஆகியோரைப் பிடித்து வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

இதில் ராமச்சந்திரன், ரமேஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பெயிண்ட் ஆலையில் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ஆய்வு

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள தனியாா் பெயிண்ட் தொழிற்சாலையில், மெத்தனால், எத்தனால் ஆகியவை சட்டவிரோத இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் ரூ 2.17 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறப்பு

பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ. 2.17 கோடியே 63 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை வளாகத்தை காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா். பொன்னமராவதி பேரூராட... மேலும் பார்க்க

புதுகையில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 88.42 கோடி கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 88.42 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா். சென்னையில் மகளிா் க... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை: டிடிவி. தினகரன்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு முதல்வா் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன். புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: திருமாவளவன் திமுக கூட்டணியில் உள்ளா... மேலும் பார்க்க

நெடுவாசல் நாடியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் நாடியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நெடுவாசல் நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோ... மேலும் பார்க்க

திருக்குறளை எளிமையாகப் பயிலும் பயிற்சி

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறளை எளிமையாகக் கற்கும் வழியைச் சொல்லித் தரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க