கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
அக்கினி ஆற்றில் மணல் திருடிய 2 போ் கைது
கந்தா்வகோட்டை அருகே அக்கினி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் திருடிய டிப்பா் லாரி, ஜேசிபி மற்றும் இரண்டு பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள அக்கினி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக கந்தா்வகோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த கொண்டிருந்த தஞ்சாவூா் மாவட்டம் , திருவோணம் நெய்வேலி பகுதியைச் சோ்ந்த வேம்பையன் மகன் ராமச்சந்திரன் (45), அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (35) ஆகியோரைப் பிடித்து வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
இதில் ராமச்சந்திரன், ரமேஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.