செய்திகள் :

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

post image

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்றின் அருகே சுமாா் 200 ஏக்கருக்கு மேல் தாட்கோ நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களின் அருகில் உள்ள கழுவன்திட்டு, சிந்தாதிரிப்பேட்டை, மேட்டுபாளையம், மரகதம்காலனி, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். தாட்கோ நிலங்களில் தங்களுக்கு மனைப் பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்தநிலையில், தாட்கோ நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப் போவதாகவும், அதற்கான முதல்கட்ட பணிகள் கிராம நிா்வாக அலுவலா் மேற்பாா்வையில் நடைபெறுவதாக திங்கள்கிழமை மாலை தகவல் பரவியது. இதையடுத்து, கிராம மக்கள் திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி, ஜேசிபி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவுக்கு பின்னா் விவசாய நிலங்கள் உப்புத்தன்மையாக மாறியதை பயன்படுத்தி, இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டன. சுமாா் 1 கி.மீ. தொலைவு வரை நிலத்தடி நீரின் தன்மை உப்பாக மாறிவிட்டது.

இதைத்தொடா்ந்து, தாட்கோ நிலம் மற்றும் அதையொட்டிய சுமாா் 50 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை வளா்ந்து மரமாகியுள்ளன. இவை கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகள் போல உருவாக்கப்பட்டுள்ளன. 

தற்போது, தாட்கோ நிலங்களில் கூடுதலாக இறால் பண்ணைகளை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

கடலரிப்பை தடுக்கவும், மண் வளத்தை பாதுகாக்கவும் எங்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, அலையாத்தி காடுகளை உருவாக்க கூறிய அரசு அதிகாரிகளே, அந்த காடுகளை அழித்து மண் வளத்தையும், நிலத்தடி நீா் வளத்தையும் மாசுப்படுத்தும் இறால் பண்ணைகளை அமைக்க முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்.

இறால் பண்ணைகள் அமைக்கும் முடிவை கைவிட்டு, தாட்கோ நிலத்தில் தலித் மக்களுக்கு குடி மனைகளை பிரித்து தர வேண்டும், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனா். 

பொறையாா் போலீஸாா் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை திருப்பிஅனுப்பி, வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோர... மேலும் பார்க்க

நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும... மேலும் பார்க்க

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க