செய்திகள் :

அல்லு அர்ஜுன் போல சித்தராமையா, சிவக்குமார் கைது செய்யப்படுவார்களா? பாஜக கேள்வி

post image

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா செய்வாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக எம்பி சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.

18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.

பெங்களூரு விதானசெளதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாஜக எம்பி சம்பித் பத்ரா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“பிசிசிஐ தலைவரும் ஐபிஎல் தலைவரும் வெற்றிப் பேரணி குறித்து தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு முன்னதாகவும் வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு நாள்களுக்கு பின்னரே முழு ஏற்பாட்டுடன் நடத்தப்பட்டிருக்கிறது.

முதல்வரும் துணை முதல்வரும் ஆர்சிபி அணியினரை வெற்றி பேரணி நடத்த கட்டாயப்படுத்தினர். வெறும் 12 மணிநேரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதன்விளைவாக 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆர்சிபி விழாவுக்கு அனுமதி அளித்தது யார்? கூட்ட நெரிசலில் மரணம் நிகழ்ந்தபோதும் நிகழ்ச்சியை தொடர யார் அனுமதித்தார்கள்?

இது மாநில அரசின் தோல்வி. துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு கேமிராவுக்கும் இடையில் வந்த ஒருவரை, கழுத்தைப் பிடித்து சிவக்குமார் தள்ளிவிடும் விடியோ பரவி வருகின்றது.

கூட்ட நெரிசலால் ரசிகர் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அதே கொள்கையின் அடிப்படையில் சித்தரமையாவையும் டி.கே.சிவக்குமாரையும் கைது செய்வார்களா?

மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார்? சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் ராஜிநாமா செய்யச் சொல்வாரா?” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க