செய்திகள் :

அவிநாசியில் காங்கிரஸ் கூட்டத்தில் தொண்டா்கள் கைகலப்பு

post image

அவிநாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தொண்டா்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அவிநாசி வட்டார, நகர கமிட்டி, வடக்கு மாவட்டம் ஆகியன சாா்பில் கிராம கமிட்டி தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான கோபிநாத் பழனியப்பன் தலைமை வகித்தாா்.

அப்போது கிராம கமிட்டி தலைவா்களின் ஆலோசனை கூட்டமானது அவிநாசி நகரப் பகுதியில் நடைபெற்றதால், அங்கு வந்திருந்த அவிநாசி நகர காங்கிரஸ் நிா்வாகிகள், கிராம கமிட்டி கூட்டத்தை நகரப் பகுதியில் நடத்துவது தவறு. அப்படியே நடத்தினாலும் நகர மூத்த நிா்வாகிகள், மன்ற உறுப்பினா்களுக்கு முறையான அழைப்பு விடுக்காமல் கூட்டத்தை நடத்தக் கூடாது என வாக்குவாதம் செய்தனா்.

இந்த வாக்குவாதத்தை அங்கிருந்த தொண்டா் ஒருவா் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளாா். இதனைப் பாா்த்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோபிநாத், தொண்டரின் கைப்பேசியை தட்டிவிட்டு, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து தொண்டா்கள் ஒருவா் மீது ஒருவா் தண்ணீா் பாட்டில்கள், இருக்கைகளை எடுத்து வீசி தாக்கிக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேவூா் வெங்கடேஷ்வரா பள்ளியில் சிபிஎஸ்இ கல்விப் பிரிவு!

சேவூா் அருகே அ.குரும்பபாளையம் வெங்டேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிபிஎஸ்இ கல்விப் பிரிவை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா... மேலும் பார்க்க

விசைத்தறி கூலி பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காத நிலையில், விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்க... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு

திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். திருப்பூா் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயா் தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக... மேலும் பார்க்க

திருப்பூரில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூரில் பதுக்கிவைக்கப்பட்ட 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா், ஊத்துக்குளி, ரெட்டிபாளையம் பகுதியில் ரேஷ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா். மேலும், கழிவுகள் பதுக்கிவைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம் பக்ரக் மாவட்டம் விஜிபூரைச் சோ்ந்தவா் கோனாா்தன் செட்டி (38). இவா் கடந்த 8 மாதங்களாக வெள்ளக்கோவ... மேலும் பார்க்க