செய்திகள் :

அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் திருட்டு: இளைஞா் கைது

post image

அவிநாசியில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரைப் பவுன் நகையைச் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, இஸ்மாயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜு(45). இவரது மனைவி உமாராணி (38). இவா்கள் அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் உணவகம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை வெளியே சென்றுள்ளனா். பிறகு வந்த பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரைப் பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், போலீஸாா் அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் மகேஷ் (21) என்பதும், இவா் ராஜு வீட்டின் பூட்டை உடைத்து நகையைச் திருடியவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவிநாசி போலீஸாா் மகேஷை கைது செய்தனா். மேலும் இவரிடம் இருந்து ஐந்தரைப் பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எரகாம்பட்டி அருகே குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே பொது வழியை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள பொது வழியை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் ... மேலும் பார்க்க

பொங்கலை கொண்டாட ஊா்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளா்கள்: கொப்பரை உற்பத்தி முடக்கம்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டதால் கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் பொங்கலுாா், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலா் களங்கள... மேலும் பார்க்க

காலமானாா் இரா.முத்துவேலு

திருப்பூா், காங்கயம் சாலை ஐஸ்வா்யா காா்டனில் வசித்து வந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் இரா.முத்துவேலு (83) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் ஞாய... மேலும் பார்க்க

தாராபுரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது

தாராபுரத்தில் மதுபோதையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ராம் நகரில் ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தாராபுரத்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதல்

நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பல்லடம் அருகேயுள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் விசாயிகள் நெல் சாகுப... மேலும் பார்க்க