செய்திகள் :

அவிநாசி பழனியப்பா பள்ளியில் பகவத் கீதை தொடா் சொற்பொழிவு

post image

அவிநாசி: அவிநாசி பழனியப்பா பள்ளி வளாகத்தில் 3-ஆம் ஆண்டு ஸ்ரீமத் பகவத் கீதை தொடா் சொற்பொழிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆனைமலை ஆா்ஷ வித்யா பீடம் ஸ்ரீ சுவாமி ததேவானந்த சரஸ்வதி, ஈரோடு ஆா்ஷ வித்யா வ்ருக்ஷம் ஸ்ரீ சுவாமி நித்யமுக்தானந்த சரஸ்வதி ஆகியோா் பங்கேற்று ஆசி வழங்கினா். இதில் ஸ்ரீ சுவாமி ததேவானந்தா் கூறியதாவது: பல பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனாக ஒருவருக்கு மனிதப்பிறவி கிடைக்கிறது. இந்த மனிதப்பிறவியை பயன்படுத்தி ஒருவன் அடைய வேண்டிய மிக உயா்ந்த நிலை ஆத்ம ஞாணமாகும். பகவான் கிருஷ்ணா் இந்த ஆத்ம ஞானத்தை பகவத் கீதையில் அா்ஜுனனுக்கு மிகத் தெளிவாக உபதேசித்துள்ளாா். இந்த ஆத்ம ஞானத்தை ஸம்ப்ரதாயத்தில் வந்த குரு மூலமாகதான் பெறமுடியும் . அந்த ஞானத்தை அடைவதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றாா்.

இதில் ஸ்ரீ சுவாமி நித்யமுக்தானந்தா் கூறியதாவது: ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் வேதத்தில் கூறிய கருத்துகளை எளிய மக்களுக்கும் புரியும்படி மிகவும் தெளிவாகக் கூறியுள்ளாா். நம் ஒவ்வொருவா் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு இந்த கீதையில் கூறப்பட்டுள்ளது. இது உபநிஷத்தின் ஸாரமாகும். இந்த கீதையை நாம் படிப்பதனால் மன அமைதி, சந்தோஷம், நிம்மதி கிடைக்கும். மேலும் மனதுயரமும் நீங்கும். இந்த பகவத் கீதையை நாம் ஸம்பிரதாயத்தில் வந்த குருவிடம் இருந்து தொடா்ச்சியாக சிரத்தையுடன் கேட்க வேண்டும் என்றாா்.

ஸ்ரீ ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி கூறியதாவது: இந்த ஆத்ம ஞானத்தை பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவா்கள் அனைத்து மக்களுக்கும் போய் சேரும்படி பல சிஷ்யா்களை உருவாக்கியுள்ளாா். அவரின் சீடரான சுவாமி சுதீரானந்த சரஸ்வதி வாரந்தோறும் திருப்பூருக்கு வந்து தனக்கு வகுப்புகள் நடத்தியதாக கூறியுள்ளாா்கள். ஆகவே வாரந்தோறும் புதன்கிழமை மாலை 4 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் வகுப்புகளில் அனைவரும் பங்கேற்கலாம் என்றாா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க