அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராக கௌரவ் கோகோய் நியமனம்
புது தில்லி: அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளாா். அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் மகனான கௌரவ் கோகோய் இப்போது மக்களவை காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவராக உள்ளாா். அஸ்ஸாமில் கடந்த இரு சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதனால், அடுத்த ஆண்டு தோ்தலில் வெற்றி பெறும் நோக்கில் காங்கிரஸ் இப்போதே நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் முதல் முக்கிய நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த புபென் குமாா் போரா மாற்றப்பட்டு, கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதிய செயல் தலைவா்களாக ஜாகீா் ஹுசைன் சிக்தா், ரோஸ்லின் திா்கே, பிரதீப் சா்க்காா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த புதிய நியமனங்களை காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மேற்கொண்டுள்ளாா் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.