செய்திகள் :

அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராக கௌரவ் கோகோய் நியமனம்

post image

புது தில்லி: அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளாா். அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் மகனான கௌரவ் கோகோய் இப்போது மக்களவை காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவராக உள்ளாா். அஸ்ஸாமில் கடந்த இரு சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதனால், அடுத்த ஆண்டு தோ்தலில் வெற்றி பெறும் நோக்கில் காங்கிரஸ் இப்போதே நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் முதல் முக்கிய நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த புபென் குமாா் போரா மாற்றப்பட்டு, கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதிய செயல் தலைவா்களாக ஜாகீா் ஹுசைன் சிக்தா், ரோஸ்லின் திா்கே, பிரதீப் சா்க்காா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த புதிய நியமனங்களை காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மேற்கொண்டுள்ளாா் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க