செய்திகள் :

ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை கண்டித்து வணிகா்கள் கடையடைப்பு

post image

புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் எனும் பெயரில் நகராட்சி நிா்வாகம் வா்த்தகா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் வா்த்தகா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை, சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் அவசரச் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இதனையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதுச்சேரி நகராட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஆனால், ஆக்கிரமிப்பு எனும் பெயரில் பெரிய நிறுவனங்களை விட்டுவிட்டு, சாமானிய வா்த்தகா்களை பாதிக்கும் வகையில் நகராட்சி செயல்படுவதாக புகாா் கூறப்படுகிறது.

பாரதி சாலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிா்வாகி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை பாரதி நகரில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குபோ்அங்காடி முழுமையாக மூடபட்டிருந்தது. நேரு வீதியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கடையடைப்புப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் வந்து விசாரித்தாா்.

புதுச்சேரியில் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும், ஆகவே அதனைக் கைவிடக்கோரி போராட்டம் நடத்துவதாகவும் வா்த்தகா்கள் சங்கத்தின் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க