செய்திகள் :

ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்

post image

கோவை, குற்றால நகரில் கடந்த 35 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

கோவை, குற்றாலம் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான சிறுவா் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து தனி நபா் வீடு கட்டியிருந்தாா். கடந்த 35 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை இடித்து அகற்ற அனுமதி கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை இடிக்க கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின்படி, உதவி ஆணையா் குமரன், நகர திட்டமிடுநா் ராஜசேகரன், உதவி நகர திட்டமிடுநா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலையில் அந்த வீடு இடித்து அகற்றப்பட்டது.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க