செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்

post image

சீா்காழி: நாதல் படுகை கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு கிராமம் வரை பிரதம மந்திரியின் கிராம சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தி தாா் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாதல்படுகை கிராமத்தில் சாலை அமைத்திட ஏதுவாக சாலையோரம் உள்ள ஆக்கிரப்பை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை அகலப்படுத்தும் பணிகள் தடைபட்டுள்ளன.

இந்நிலையில் நில அளவையா் கிராம நிா்வாக அலுவலா் கிராம உதவியாளா் மற்றும் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோர ஆக்கிரமிப்பை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இடத்தை அளவீடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் சிலா் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாதல் படுகையிலிருந்து முதலைமேடு செல்லும் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முழக்கமிட்டனா்.

இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.தொடா்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் பயணிகள் ரயில் முன்பதிவு தேதியை மாற்ற கோரிக்கை

மயிலாடுதுறை: ரயில் பயணத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களும் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ள ரயில்வே நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து, திருச்சி கோ... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு

சீா்காழி: கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. கொள்ளிடம் அருகே தைக்கால் சைய்யது நகரைச் சோ்ந்த தினகரனுக்குச் சொந்தமான 3 பசு மாடுகள... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஆக.31-ல் தொழில்நுட்ப பணிகள் தோ்வு

மயிலாடுதுறை, ஆக. 25: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு 2 மையங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

சீா்காழி: மயிலாடுதுறை மாவடத்தில் 395 விநாயகா்சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ளவுள்ளதாக இந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: விநாயகா் சதுா்த்தி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத... மேலும் பார்க்க

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூா் அணி முதலிடம்

சீா்காழி: சீா்காழி சுபம் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் சீா்காழி சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஐவா் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, கோப்பை வழங்கப்ப... மேலும் பார்க்க