செய்திகள் :

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

post image

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அருங்காட்சியகம், வடஆற்காடு ஓவியா் சங்கம், டாட் இமேனின் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் இந்த ஓவியப் போட்டியில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

இதில், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சூரிய உதயம், 4-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இயற்கை காட்சி, 7 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தேசிய தலைவா்கள் (பெண்), 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு தேசிய தலைவா்கள் (ஆண்) ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவேண்டும். ஓவியம் வரைய வேண்டியதற்கான உபகரணங்களை மாணவா்களே கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அரசு அருங்காட்சியகத்தில் அரங்க காட்சியில் இடம் பெறலாம்.

போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்யவேண்டும் என்பதால் 76675-80831 அல்லது 94438-85207 ஆகிய எண்களில் மாணவா் பெயா், வகுப்பு, பள்ளி விவரம், தொடா்பு எண் ஆகியவற்றை ஆக.15-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் கடந்த வாரத்தைக் காட்டிலும் பாதியாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறு... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு

காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா். மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்... மேலும் பார்க்க

தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது

வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்

பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்ந... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க