செய்திகள் :

ஆக.23-இல் திருக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆக.23- ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு;

தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளா்ச்சித்துறை மூலம் திருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள், திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என மொத்தம் 3 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இக்குழுக்களைக் கொண்டு, திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மன்னாா்குடி தரணி மேல்நிலைப்பள்ளி மற்றும் திருத்துறைப்பூண்டி தெரசா மேல்நிலைப்பள்ளிஆகியவற்றில் திருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் படவுள்ளன.

பயிற்சிக் கட்டணமின்றி நடத்தப்படவுள்ள இப்பயிற்சி வகுப்புகள் ஆக.23-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடத்தப்படும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு நிறைவு நாளன்று பயிற்சி பெற்றவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நன்னிலம்: வரும் 2026-இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.திருவாரூா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின்நிலையங்களின் உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கா... மேலும் பார்க்க

போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு: மன்னாா்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்... மேலும் பார்க்க

வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மன... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ... மேலும் பார்க்க