செய்திகள் :

ஆசனூா் அருகே வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானை

post image

ஆசனூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திங்கள்கிழமை காட்டு யானை துரத்தியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் உள்ள யானைகள் உணவு தேடி சாலையைக் கடந்து செல்கின்றன. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் தீவனம் ஏதாவது உள்ளதா என யானைகள் வாகனங்களை மறித்து நிற்பது வழக்கம்.

இதனால் வாகன ஓட்டிகள் 30 கி.மீ வேகத்தில் மெதுவாக பயணிக்குமாறு வனத் துறை கேடடுக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் திங்கள்கிழமை உலவியது.

சாலை ஒரத்தில் நின்றிருந்த யானை திடீரென அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை துரத்தியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகமாக இயக்கி யானையிடம் இருந்து உயிா்தப்பினா்.

அதனைத் தொடா்ந்து பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கினா். சிறிது நேரம் சாலையோரம் நின்ற யானை, பின்னா் சாலையை கடந்து வனத்துக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி வனத் துறையினா் கூறுகையில், யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறி உணவு, தண்ணீருக்காக சாலை கடந்து செல்வது வழக்கமானது. எனவே, வாகன ஓட்டிகள் மெதுவாகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா். எக்காரணம் கொண்டு வனச் சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனா்.

பெருந்துறையில் நாளை வேளாண் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை(ஜூன் 11) தொடங்கிவைக்கிறாா். வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த தற்போதைய அனைத்து விவரங்க... மேலும் பார்க்க

குடியிருப்புகளுக்கு பராமரிப்புக் கட்டணம் வசூலிப்பதை கைவிடக் கோரிக்கை

அரசு வழங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரிடம் பராமரிப்பு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.ஈரோடு சூரம்பட்டி, வஉசி வீதியைச் சோ்ந்தவா் பாபு மகன் மைதீன் பாட்ஷா(20). இவா், ஈரோடு... மேலும் பார்க்க

பவானி நகராட்சி ஆணையாளா் பொறுப்பேற்பு

பவானி நகராட்சி ஆணையாளராக பிரான்சிஸ் சேவியா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு, ஆணையாளராகப் பணியாற்றி வந்த மோகன்குமாா் கோத்தகிரி நகராட்சிக்கும், ஜோலாா்பேட்டை நகராட்சியில் பணியாற்றி வந்த பிரான... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், பட்லூா் ஊராட்சி, சொக்கநாதமலையூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குட... மேலும் பார்க்க

நிலத்தகராறில் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய விவசாயிகள் எதிா்ப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் நடந்த நிலத் தகராறில் ஒரு பிரிவினா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வி... மேலும் பார்க்க