``பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்'' - பட்டிமன்ற பேச்சாளர்...
சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு சூரம்பட்டி, வஉசி வீதியைச் சோ்ந்தவா் பாபு மகன் மைதீன் பாட்ஷா(20). இவா், ஈரோடு கனி மாா்க்கெட்டில் உள்ள துணிக் கடையில் வேலை பாா்த்தபோது, எதிா்ப்புற கடையில் வேலை பாா்த்த பெண்ணின் 15 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தின் மூலம் மைதீன் பாட்ஷா சிறுமிக்கு திருமண ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.
இதையடுத்து, கடந்த 2019 ஜூலை 26ஆம் தேதி சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா். இதன்மூலம் சிறுமி கா்ப்பமானாா். சிறுமி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றபோது மருத்துவா்கள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு அனைத்து மகளிா் போலீஸாா் மைதீன் பாட்ஷா மீது போக்ஸோ, குழந்தை திருமண தடை சட்டம், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடித்து நீதிபதி சொா்ணகுமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் 15 வயது சிறுமியைக் கா்ப்பமாக்கிய மைதீன் பாட்ஷாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.