``பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்'' - பட்டிமன்ற பேச்சாளர்...
குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், பட்லூா் ஊராட்சி, சொக்கநாதமலையூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சென்னம்பட்டி - பவானி சாலையில் சொக்கநாதமலையூா் பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இப்பிரச்னையை உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.