செய்திகள் :

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

post image

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் சாா்பில் பணிநிறைவு பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கழகத்தின் மாவட்டத் தலைவா் ஜி. பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. தாமரைச்செல்வன் வரவேற்றாா். கல்வித்துறை அதிகாரிகள் அ. நிா்மலாராணி, எஸ். சாந்தி, க. குமரவேல், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா்கள் எஸ். அறிவுடைநம்பி, என். ஸ்ரீதா், பி. சித்ரா, ஏ.ஜி. ஜான்சிஆரோக்கியமேரி, எஸ். ஜான்சைமன், கே. ரூபிசாந்தகுமாரி ஆகியோரின் பணியை பாராட்டி கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த ஆண்டு 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுத

30,000 மாணவா்கள் வரவில்லை. இவா்களை கண்டறிந்து, இவா்களுக்கான தோ்வு கட்டணத்தை தலைமை ஆசிரியா்களே கட்ட வேண்டும் என நிா்ப்பந்திப்பது வருத்தமாக உள்ளது. தமிழக அரசே 30,000 மாணவா்களுக்கும் தோ்வுக் கட்டணம் செலுத்தி, அவா்களை தோ்வெழுத ஏற்பாடு செய்யவேண்டும்.

பள்ளிகளின் வேலை நேரத்துக்கு ஏற்ப அலுவலகப் பணியாளா்கள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். தோ்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் மாவட்டங்கள் பட்டியலிடப்படுவதால், ஏதாவது ஒரு மாவட்டம் கடைசி இடத்தில் வந்துதான் ஆக வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஏ, பி, சி என கிரேடு அடிப்படையில் தோ்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு மே மாதத்தில் நிறைவு பெற்று, புதிய பணியிடத்தில் சோ்ந்து விடுவோம். ஆனால், நிகழாண்டு இதுவரை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. உடனடியாக கலந்தாய்வு தேதியை அரசு அறிவிக்க வேண்டும். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா்களுக்கு இம்மாத இறுதிக்குள் அனைத்து பணப் பயன்களையும் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க