செய்திகள் :

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தல்

post image

அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் நாகை மாவட்ட பொதுக் குழு கூட்டம் அரசு ஓய்வூதியா் சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் துணை செயலராக கீழையூா் ஒன்றிய பட்டதாரி ஆசிரியா் கோ. மணிமாறன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தொடா்ந்து, தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பதவி உயா்வுக்கு ஆசிரியா் தகுதி தோ்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவோடு பதவி உயா்வு மற்றும் பணியிடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைச் செயலா் பாலசுப்பிரமணியன், மாநில ஊடக பிரிவுச் செயலா் ச.சிவவேலன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமாவளவன், மாவட்டச் செயலா் இரா. அரசமணி, ஒன்றிய பொறுப்பாளா் சிவா அசோக், மாவட்ட பொருளாளா் அறிவொளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க