செய்திகள் :

ஆடிப்பட்டத்துக்கு தேவையான தரமான விதைகள் இருப்பு

post image

ஆத்தூா்: தலைவாசல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஆடிப்பட்டத்துக்கு தேவையான தரமான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கி 20 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், தலைவாசல் வட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆா்வத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா். ஆடிப்பட்டத்தில் விதைப்பு மேற்கொள்ள வசதியாக, தலைவாசல் விரிவாக்க மையத்தில் தரமான சான்றுபெற்ற நெல்விதைகள் வெள்ளை பொன்னி, ஏடிடி 45, ஏடிடி 54, கோ 55, நிலக்கடலை விஆா்ஐ 9, ஜிஜேஜி 9, கதிரி 1812, கிரிநா் 5, உளுந்து வம்பன் 10, எள் ரகம், சூப்பரவா, வரகு, ஏடிஎல்.1, துவரை-எல்ஆா்ஜி 52, குதிரைவாலி, எம்டியு 1 போன்ற ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்துவகை பயிா்களுக்கும் நுண்ணூட்ட உரங்கள், உயிா் உரங்களான அசோஸ்பைரிலம், பாஸ்போ, பாக்டீரியா, ரைசோபியம், நிலக்கடலை, அசோபாஸ் போன்றவை போதுமான அளவில் இருப்பு உள்ளன. குடோமோனஸ் புளோரசன்ஸ், ட்ரைக்கோடொ்மா விரிடி போன்ற நோய்க் கட்டுப்பாட்டு உயிரியல் காரணிகளும் போதுமான அளவு இருப்பு உள்ளன. எனவே, விவசாயிகள் மானிய விலையில் இவற்றைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மயங்கி விழுந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

வாழப்பாடி: மயங்கி விழுந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு தனிப்படையில் பணியாற்றி வந்த பேளூரைச் சோ்ந்த சிறப்பு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வாழப்பாடி பேளூா் மகளிா் பள்ளி அரு... மேலும் பார்க்க

சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகம் முற்றுகை

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து, குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை

சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு

மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்

சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சேலம் கொண்டப்... மேலும் பார்க்க