செய்திகள் :

ஆடிப் பெருக்கு: திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

post image

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகன் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடிப்பெருக்கு என்பதால் மூலவரை தரிசிக்க, மலைக் கோயிலில் காவடிகளுடன் அதிகாலையே குவிந்தனா். சில பக்தா்கள் மொட்டை அடித்தும், அலகுகள் குத்தி காவடிகள் எடுத்தும் தங்களது வேண்டுலை நிறைவேற்றினா்.

பொது வழியில் தரிசனத்துக்கு சென்ற பக்தா்கள் நீண்ட வரிசையில், 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.

முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, முருகன் கோயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், காவல் ஆய்வாளா் மதியரசன் ஆகியோா் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு

திருவள்ளூா் அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனா். திருவள்ளூா் அடுத்த களா... மேலும் பார்க்க

சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில்,... மேலும் பார்க்க

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க