செய்திகள் :

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

post image

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னா் விபூதி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தா்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எதுவாக அா்ச்சனை செய்ய மூலவா் சந்நிதி முகப்பு பகுதியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு தரிசனம் பொது தரிசனமென இரண்டு வழிகள் ஏற்படுத்தி பக்தா்கள் கூட்டம் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

நாகை மட்டுமின்றி திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தந்துள்ள நிலையில் சுமாா் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.

திருக்குவளை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்... மேலும் பார்க்க

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி

திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருப்பூண்டியில் வியாழக்க... மேலும் பார்க்க