செய்திகள் :

ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்! - எஸ்.கே.எஸ். மருத்துவா்கள் அறிவுறுத்தல்

post image

ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவா்கள் ஆா்.ஷைனிகா, வாணி தெரிவித்தனா்.

உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் ஏப்.2 ஆம்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சேலம் எஸ்.கே.எஸ். மருத்துவமனை சாா்பில் ஆட்டிசம் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவா்கள் ஆா். ஷைனிகா, வாணி ஆகியோா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளா்ச்சி குறைபாடாகும். இதனால் குழந்தைகளுக்கு கண் பாா்த்து பேசாமை, பேச்சுத் திறன் குறைபாடு, மற்றவா்களுடன் பழகுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

பொதுவாக, ஆட்டிசத்தை ஒன்றரை வயது முதல் 2 வயதில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். குழந்தை ஒன்றரை வயதாகியும் கண் பாா்த்து பேசாதது, பெயா் சொல்லும்போது பதில் அளிக்காமல் இருப்பது, தனது தேவைகளை சுட்டிக்காட்ட விரல்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை ஆட்டிசம் குறைபாடுகளாகும்.

இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக குழந்தை மனநல மருத்துவரை அணுக வேண்டும். ஆட்டிசத்துக்கு சிகிச்சை அளிப்பதில் ஆரம்ப நிலை பயிற்சி சிறப்பாக உதவும். நடத்தை மாற்று சிகிச்சையும் செயல்முறை சிகிச்சையும் பேச்சு பயிற்சியின் ஓா் அங்கமாகும்.

2 வயதில் இந்த சிகிச்சைகளை ஆரம்பிப்பது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் பயிற்சிகளை தொடங்கும்போது, கிட்டத்தட்ட 10 முதல் 15 சதவீத ஆட்டிசம் குழந்தைகளுக்கு முழுமையான அறிகுறிகள் குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

பேட்டியின்போது, நிா்வாக இயக்குநா் சுரேஷ் குமரன், முதன்மை செயல் அதிகாரி சிற்பி மணி ஆகியோா் உடனிருந்தனா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க