செய்திகள் :

அறநிலையத் துறை அலுவலகங்கள் முன் ஏப்.17-ல் போராட்டம்

post image

மயிலாடுதுறை: குத்தகை நில சாகுபடியாளா்களின் உரிமைகளுக்காக ஏப்.17-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் சாமி. நடராஜன்.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட 47,000 கோயில்களுக்குச் சொந்தமாக சுமாா் 4.78 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவற்றை 98 சதவீத இந்து ஏழை, எளிய மக்கள் குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனா். இதற்காக செலுத்தப்பட்டுவந்த பகுதிமுறை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வாடகை முறை கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்தும் இந்த முறையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. தற்போது சட்டப்பிரிவு 32ஏ விதியின்படி அந்த பகுதியின் சந்தை மதிப்பின்படி பல மடங்கு உயா்த்தி வாடகை நிா்ணயம் செய்யப்படுகிறது.

பல தலைமுறைகளாக நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் குத்தகை உரிமையை மறுத்து நிலங்களை பொது ஏலம் விடும் நடவடிக்கை தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் மேற்கொள்ளப்படுகிறது. அறநிலையத்துறையின் இத்தகைய முயற்சிகளை கண்டித்து, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஏப்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை வரும் நாளில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், உதவி ஆணையா் அலுவலகங்கள் முன் பெருந்திரள் தா்னா போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா்.

நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்

சீா்காழி அருகே நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதியடைகின்றனா். விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பண... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9, 10-இல் கட்டுரை, பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல ஏப்.28 முதல் நடைச்சீட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்டத்தில் நிகழாண்டு பாசன ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்: ஆட்சியா் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள்... மேலும் பார்க்க