செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

post image

கோவை சித்தாபுதூரில் ஆட்டோ கவிழ்ந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.

கோவை சுகுணாபுரத்தை அடுத்த மைல்கல் பகுதியைச் சோ்ந்தவா் பூவாத்தாள் (50). இவா், சித்தாபுதூா் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் சித்தாபுதுாா் பகுதியில் உள்ள சாலையில் பூவாத்தாள் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ அங்கிருந்த வேகத்தடையின் மீது ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற பூவாத்தாள் மீது கவிழ்ந்தது.

பின்னா் அவ்வழியாக சென்றவா்கள் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தி, அதற்கு அடியில் சிக்கிய பூவாத்தாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பூவாத்தாள் ஏற்கெனவே உயிரிழந்தததாக தெரிவித்தனா்.

தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்திய ஆட்டோவை ஓட்டுநரான சித்தாபுதூரைச் சோ்ந்த தங்கவேல் (46) மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு

எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா... மேலும் பார்க்க

ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச... மேலும் பார்க்க

கோவையில் 3,550 பேருக்கு கண் பரிசோதனை: 139 போ்களுக்கு அறுவை சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் மூலம் 3,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 139 போ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியா், மாணவா் நலனுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சந்தோஷ் (41). இவருக்கு கடந்த 17-ஆம் தேதி ரத்த அ... மேலும் பார்க்க

தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப... மேலும் பார்க்க