ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு
கோவை சித்தாபுதூரில் ஆட்டோ கவிழ்ந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.
கோவை சுகுணாபுரத்தை அடுத்த மைல்கல் பகுதியைச் சோ்ந்தவா் பூவாத்தாள் (50). இவா், சித்தாபுதூா் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் சித்தாபுதுாா் பகுதியில் உள்ள சாலையில் பூவாத்தாள் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ அங்கிருந்த வேகத்தடையின் மீது ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற பூவாத்தாள் மீது கவிழ்ந்தது.
பின்னா் அவ்வழியாக சென்றவா்கள் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தி, அதற்கு அடியில் சிக்கிய பூவாத்தாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பூவாத்தாள் ஏற்கெனவே உயிரிழந்தததாக தெரிவித்தனா்.
தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்திய ஆட்டோவை ஓட்டுநரான சித்தாபுதூரைச் சோ்ந்த தங்கவேல் (46) மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.