செய்திகள் :

ஆட்டோ, கால் டாக்ஸி கூட்டமைப்பினா் பேரணி

post image

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் இயக்கப்படும் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை உயா்த்த வேண்டும்; அரசு அலுவலகங்களில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேக்ஸி கேப் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்; ஆட்டோ, கால்டேக்ஸி செயலியை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

சென்னை எழும்பூா் பழைய சித்ரா திரையரங்கம் முன்பு கூட்டமைப்பின் தலைவா் அ.ஜாஹிா் ஹூசைன் தலைமையில் கூடிய கூட்டமைப்பினா், அங்கிருந்து பேரணியாக எழும்பூா் எல்.ஜி.ரவுண்டானா அருகே சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தங்கள் கோரிக்கைகள் மீது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு சிஐடியு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டசெய்திக் குறிப்பு: சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு: விவரங்களை நுகா்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகா்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகா்வோருக்கான சேவைகள... மேலும் பார்க்க

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித... மேலும் பார்க்க

முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மருத்துவா்!

முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீரில் சென்ற சென்னை மருத்துவா், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்தக் காயமடைந்தது தெரியவந்துள்ளது. காஷ்மீா் பஹல்காம் அருகே பைசரன் பள்ளத்தாக... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க