மதுரையில் இருந்து அமெரிக்கா பறக்கும் பட்டுக்கிளி - கைவினைப் பொருள்கள் தயாரிப்பில...
ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸி.க்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை 1-2 என இழந்தது.
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தெ.ஆ. அணி முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தெ.ஆ. அணி 50 ஓவர்களில் 296/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக பேட் செய்த ஆஸி. அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸி. அணியில் தனியாளாகப் போராடிய மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தெ.ஆ. அணி சார்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து, ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
இதன் மூலம், ஒருநாள் தொடரில் 1-0 என தெ.ஆ. அணி முன்னிலை வகிக்கிறது.