செய்திகள் :

Dog Bite: நாய் போல் கத்துவார்களா; அசைவம் சாப்பிடக்கூடாதா; தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்களா?

post image

நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இருக்கிறார்கள்.

சிலர், நாய்க்கடித்த இடத்தில் மஞ்சளைப்பூசிக் கொண்டு, அசைவத்தைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் வரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற மக்களிடையே நாய்க்கடித் தொடர்பாக பல நம்பிக்கைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. அவை சரியா, தவறா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர். ராஜேஷ் விளக்குகிறார்.

தெருநாய்
தெருநாய்

ரேபிஸ் என்பது ஒருவகை வைரஸ் தொற்று. இது நாய் மூலமாக மட்டுமன்றி குதிரை, பூனை, வவ்வால், கழுதை, நரி போன்ற உயிரினங்கள் மூலமாகவும் பரவக்கூடும்.

ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் 100% ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குள்ள அனைத்து நாய்க்கும் ரேபிஸ் நோய் இருக்கும் எனக் கூற முடியாது.

நூறில் ஒரு நாய்க்கு ரேபிஸ் நோய் தொற்று இருக்கக்கூடும். என்றாலும், எந்த நாய் கடித்தாலும், பின்விளைவுகளைத் தடுக்க ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பு.

Dog bite myth and fact
Dog bite myth and fact

நாய் கடித்தவுடனே, சிறிதும் நேரம் கடத்தாமல் தண்ணீர் மற்றும் சோப்பைக் கொண்டு கடித்த இடத்தை குறைந்தது பத்து முறையாவது நன்கு கழுவ வேண்டும்.

இவ்வாறு கழுவுவதால் அந்த வைரஸ் நியூட்ரலைஸ் ஆகும். இதை செய்யாமல் மஞ்சள்தூளை மட்டுமே தடவுவது பாதுகாப்பு கிடையாது.

இதன் பிறகு மருத்துவமனைக்குச் சென்று போஸ்ட் எக்ஸ்போஷர் புரொபைலக்சிஸ் ரேபிஸ் தடுப்பூசி (post exposure prophylaxis vaccine) போட வேண்டியது மிக அவசியம்.

நாய் கடித்தும் சிகிச்சை செய்துகொள்ளாதவர்களுக்கு, அதன் எச்சில் வழியாக கடித்த இடத்தில் இருந்து நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் ரேபிஸ் வைரஸ் பரவக்கூடும்.

முதலில் லேசாக காய்ச்சல் இருக்கும். பிறகு கடித்த இடத்தில் அரிப்பு மற்றும் கடும் வலி ஏற்படக்கூடும். அவை மேலும் தீவிரமடைந்தால் தசைகள் அனைத்தும் இறுகுவதுபோல் தோன்றும். தவிர, பக்கவாதமும் ஏற்படும்.

நாய்க்கடி பாதிப்பு மேலும் தீவிரமானால், ஏரோபோபியா மற்றும் ஹைட்ரோ போபியா (Aerophobia and hydrophobia) ஏற்படக்கூடும்.

Dog bite myth and fact
Dog bite myth and fact

ஏரோபோபியா என்றால் குளிர்ந்த காற்று மேலே பட்டால் பயம் ஏற்படும். ஹைட்ரோபோபியா என்றால் தண்ணீரைப் பார்த்தால் பயம் ஏற்படும்.

நாயக்கடியினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், தொண்டையில் அமைந்துள்ள தசைகள் இறுகி காணப்படுவதால் தண்ணீரை விழுங்க இயலாது.

இதனால் அவர்கள் தண்ணீரைக் கண்டு மிகவும் பயம் கொள்வார்கள். நாய்க்கடியினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனநிலையை பாதிக்கும்போது, தாங்கள் நாய்போல மாறிவிட்டதாக நினைத்து நாய் போல கத்துவார்கள். ஆனால், அறிவியலின்படி நாய் கடித்தால் நாய்போல் மாற மாட்டார்கள்.

நாயக்கடிக்கும் குளிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. குறிப்பாக நாய் கடித்தால் மேலும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு.

Dog bite myth and fact
Dog bite myth and fact

பொதுவாக ரேபிஸ் வைரஸ் எச்சில் வாயிலாகத்தான் பரவக்கூடும். அதனால், ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கடித்தால் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இது மிகவும் அரிதாகவே நடக்கலாம். ரேபிஸ் வைரசினால் பாதிக்கப்பட்ட மனிதன் நீண்ட நாள்கள் உயிருடன் இருக்க முடியாது என்பதே இதற்கானக் காரணம்.

நாய் கடித்தால் எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், எளிதில் செரிமானமாகும் உணவினை உண்பது நல்லது. அந்த வகையில் நான்வெஜ் சாப்பிட வேண்டாம் என முடிவெடுப்பது அவரவர் விருப்பம். தவிர, உங்களுக்கு ஏதாவது உணவு ஒவ்வாமை இருந்தால், அதுபற்றி மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டு நடப்பது நல்லது.

 Dog bite Vs Nonveg ?
Dog bite Vs Nonveg ?

இதில் சிறிதளவும் உண்மையில்லை.

ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட எந்த நாய் கடித்தாலும் ரேபிஸ் நோய் பரவும். இதில் தெரு நாய், வீட்டு நாய் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், அவற்றுக்காக தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும்.

ஒருமுறை நாய் கடித்தாலும் தடுப்பூசி போட வேண்டும். ஐந்து முறை நாய் கடித்தால் ஐந்து முறையும் தடுப்பூசி போட வேண்டும். ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டால் போதும் என நினைப்பது முற்றிலும் தவறு.

இல்லவே இல்லை. நாய்க்கடிக்கான தடுப்பூசியை, கடித்த நாளன்று, மூன்றாம் நாள், ஏழாம் நாள், 14-ம் நாள், 28-ம் நாள் என ஐந்து டோஸ்களை நாள்கள் தவறாமல் போட்டால்தான், நம் உடலில் ரேபிஸ் வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். முதல் டோஸுடன் நிறுத்திக்கொண்டால் ரேபிஸ் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

 டாக்டர் ராஜேஷ்.
டாக்டர் ராஜேஷ்.

தற்போது உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் கைகளில் போடுவதுபோலவே உருவாக்கப்படுகிறது. ரேபிஸ் வைரஸ் தடுப்பூசியையும் கைகளின் தசைகளில் போடுவார்கள். அச்சம் வேண்டாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'அதிகமா உதவறவுங்க 'அங்க'தான் இருக்காங்க'- டிரை சைக்கிளில் இந்தியப் பயணம் செய்த யூடியூபர்ஸ் பகிர்வு

மதுரையைச் சேர்ந்த சிராஜ், அருண் என்ற இரண்டு யூடியூபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகஇந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள்.கிட்டதட்ட 30,000 கி.மீ டிரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறி... மேலும் பார்க்க

``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழிலதிபர் விரக்தி ஏன்?

ரூ.12 கோடி இழந்த தொழிலதிபர் எத்தனையோ பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளனர். அப்படி இழந்தவர்களில் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். ஏராளமானோர் பண ஆசையில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விள... மேலும் பார்க்க

மும்பையில் தொடரும் கனமழை; சுரங்க சாலை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார்: நீந்தி உயிர் தப்பிய இருவர்

மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து இன்று காலை... மேலும் பார்க்க

குறைந்த மதிப்பெண்; பெற்றோருக்கு பயந்து மும்பை கிளம்பிய கர்நாடக சிறுமிகள் - மீட்டது எப்படி?

நடிகர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி மைனர் சிறார்கள் மும்பைக்கு வருவது வழக்கம். ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் பள்ளி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்... மேலும் பார்க்க

தோட்டங்களில் காணப்படும் முடியில்லா 'ஸோம்பி அணில்கள்’ - மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்காவில் பொதுவாக அழகாகக் கருதப்படும் அணில்கள், தற்போது புண்கள் மற்றும் முடியில்லாமல் ‘ஸோம்பி அணில்கள்’ என்று அழைக்கப்படும் வினோதமான தோற்றத்தில் காணப்படுகின்றன.இந்த அசாதாரண நிலைக்கு ஸ்குரல் ஃபைப்ர... மேலும் பார்க்க

25 கோடி ரூபாய் மதிப்பில் தேநீர் பாத்திரம் - உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக இருப்பது ஏன்?

ஒரு தேநீர் பாத்திரம், பல ஆடம்பர கார்களை விட மதிப்பு மிக்கதாக இருக்க முடியுமா? “தி ஈகோயிஸ்ட்” என்ற இந்த தேநீர் பாத்திரம், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2016ஆம... மேலும் பார்க்க