செய்திகள் :

ஆண்களைவிட அதிக வேலை செய்யும் பெண்கள்!

post image

வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வது பெண்களே என்று தரவுகள் கூறுகின்றன.

வீட்டைப் பராமரிக்க பெண்கள் நாளொன்றுக்கு சராசரியாக 289 நிமிடங்களை ஒதுக்குவதாகவும், ஆனால் ஆண்கள் வெறும் (சராசரியாக) 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 299 நிமிடங்களை பெண்கள் ஒதுக்கியிருந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து 2024-ல் 10 நிமிடங்கள் மட்டுமே பெண்களுக்கு குறைந்துள்ளது. அதாவது ஆண்களைக் காட்டிலும் 201 நிமிடங்கள் கூடுதலாக வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் பெண்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான ஆய்வுக்குப் பிறகு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,

ஊதியமின்றி வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 62 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்குகிறார்கள். பெண்கள் 137 நிமிடங்களை ஒதுக்கும் நிலையில், ஆண்கள் 75 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர். இதில் 15 - 59 வயது வரையிலான பெண்கள் ஈடுபடுகின்றனர்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு பெண்கள் 289 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். இதே வேளையில் ஆண்கள் 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குகின்றனர்.

புதிதாக கற்றுக் கொள்வதற்கு பெண்கள் 413 நிமிடங்களையும் ஆண்கள் 415 நிமிடங்களையும் ஒதுக்குகின்றனர்.

தங்களின் தனிப்பட்ட பராமரிப்புக்காக பெண்கள் 706 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள். இதில் பெண்களை விட ஆண்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஆண்கள் 710 நிமிடங்களை ஒதுக்கிகிறார்கள்.

தொழில்முறை வேலைவாய்ப்பு தொடர்பான செயல்களில் ஆண்கள் 473 நிமிடங்களையும் பெண்கள் 341 நிமிடங்களையும் ஒதுக்குவதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க | கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது - வெடிகுண்டுகள் பறிமுதல்

சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிகுண்டுகள், இதர வெடிபொருள்கள... மேலும் பார்க்க