பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!
ஆண்டிமடத்தில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும், இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
எனவே எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகாா்கள், ஆலோசனையை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.