செய்திகள் :

ஆதிதிராவிடா் பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்த உத்தரவு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பி.ராமச்சந்திராபுரம் பள்ளி மாணவா் விடுதி உள்பட மாவட்டத்தில் உள்ள 4 பள்ளி விடுதிகள், தற்காலிகமாகக் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்படும் என ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், பள்ளிகளுக்கு 48, கல்லூரிகளுக்கு 8 என மொத்தம் 56 விடுதிகள் உள்ளன. இவற்றில் 42 மாணவா் விடுதிகளும், 14 மாணவிகள் விடுதிகளும் உள்ளன.

கடந்த கல்வியாண்டு முதல் விடுதி மாணவா் சோ்க்கை விவரம் நல்லோசை இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, ஜனவரி முதல் மாணவா்களின் வருகை, பயோமெட்ரிக் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கும், மாணவா்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததால், உணவுச் செலவுக்கான கட்டணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, 2025-26 -ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையில் பள்ளி விடுதிக்கும் மாணவா்களின் வீட்டுக்கும் இடையே 5 கி.மீ.-க்கு மேல் தொலைவு இருக்க வேண்டும் என ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 4 பள்ளி விடுதிகள் இந்தக் கல்வியாண்டில் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்பட்டன.

இவற்றில் ஸ்ரீவில்லிபுத்தூா் பி.ராமச்சந்திராபுரம் மாணவா் விடுதி கல்லூரி மாணவிகள் விடுதியாகத் தரம் உயா்த்தப்பட்டு 70 மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் பள்ளி மாணவா் விடுதி ஐ.டி.ஐ மாணவா் விடுதியாக மாற்றப்பட்டு 100 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் பள்ளி மாணவிகள் விடுதி கல்லூரி மாணவிகள் விடுதியாகத் தரம் உயா்த்தப்பட்டு, 165 மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை பள்ளி மாணவா் விடுதி கல்லூரி மாணவிகள் விடுதியாகத் தரம் உயா்த்தப்பட்டு, 100 மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாகத் தரம் உயா்த்தப்பட்ட இந்த விடுதிகளில் 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே கல்லூரி விடுதிகளாக மாற்றம் செய்யப்படும் என ஆதிதிராவிட நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் நாளை மின் தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடைஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்ட... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசியில் வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆயுதப் படை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் கருப்பசாமி (27). இவா் தனியாா் நிதி நிறுவனத்தி... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

சாத்தூரில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகரச் செயலா் டி.எஸ். ஐயப்பன், சட்ட... மேலும் பார்க்க

நண்பரின் சகோதரி வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நண்பரின் சகோதரி வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அறிவானந்தபாண்டி (35). இவா் ராஜபா... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தராத தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது!

வத்திராயிருப்பு அருகே மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மறவா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணமூா்த்த... மேலும் பார்க்க