செய்திகள் :

ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல்கள்: ஆட்சியா்களுக்கு முறையான வழி

post image

ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் ஆட்சியா்கள், காவல்துறையினா் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வா் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றாா் விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

வடகாடு சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை திலகா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது: திமுக கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளின் அடிப்படையில் வேங்கைவயலுக்காகவும் போராட்டம் நடத்தினோம். இப்போது வடகாட்டுக்காகவும் போராட்டம் நடத்துகிறோம். வடகாடு சம்பவத்தில் காவல்துறையினா் முன்முடிவுக்கு வந்து அதற்கேற்ப ஆவணங்களைத் திரட்டுகிறாா்கள். ஜாதிய மோதல் அல்ல என்று காவல் கண்காணிப்பாளா் அறிக்கை வெளியிட்ட பிறகு, அவருக்குக் கீழே உள்ள அதிகாரி வேறு எப்படி புலனாய்வைச் செய்ய முடியும்?. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வடகாட்டில் ஆதிதிராவிட மக்களுக்குச் சொந்தமான அய்யனாா் கோயில் மற்றும் கோயிலுக்கான பொது இடத்தையும் அவா்களுக்கே பெற்றுத் தரும் வகையில் நீதிமன்றத்தில் அரசு உரிய தலையீடு செய்து பெற்றுத் தர வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்திருப்பதும், கல்லூரி பயிலும் மாணவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

பொதுவாக தமிழகம் முழுவதுமே ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியா்கள் செல்வதில்லை. காவல்துறையினரும் முறையாக நடந்து கொள்வதில்லை. எனவே, இதுதொடா்பாக ஆட்சியா்கள், காவல் துறையினா் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தமிழக முதல்வா் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழா் உச்ச நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், இந்தியா சத்திரமல்ல என்று சொல்லியிருக்கும் கருத்து மனிதாபிமானத்துக்குப் புறம்பானது. புலம்பெயா்வு என்பது உலகம் முழுவதும் நடைபெறுவதாகும்.

பஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தருவது ஒரு தேசத்தின் கடமை. ஐநா மன்றமும் உரிய வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின்இந்தக் கருத்து மனிதநேய அடிப்படைகளைத் தகா்க்கிறது என்றாா் அவா்.

பேரணி தேதி மாற்றம்: திருச்சி விமானநிலையத்தில் அவா் கூறியது: திருச்சியில் மே 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மதச் சாா்பின்மை காப்போம் பேரணி ஜூன் 14-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசுத் தலைவரைக் கொண்டு பாஜக அரசு 14 கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வலுவாக உள்ளது ‘இண்டி’ கூட்டணி வலிமையாக இல்லை என ப. சிதம்பரம் எதன் அடிப்படையில் கூறினாா் எனத்தெரியவில்லை. ஆனால் ‘இண்டி’ கூட்டணி தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும் என்றாா் அவா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க