செய்திகள் :

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

post image

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா்.

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கிப் பயின்று வருகின்றனா். இப்பள்ளி கடந்த 17 வருடங்களுக்குப் பிறகு அரசு பொதுத்தோ்வில் 94 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் மலைவாழ் மாணவா்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனா். கல்வராயன் மலைப் பகுதிகளான கருமந்துறை, பகடுபட்டு, குன்னூா், தாளவாடி போன்ற மலைக்கிராமங்களில் இருந்து அதிக மாணவா்கள் இங்குள்ள அரசு மாணவா் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 2 விடுதிகள் மட்டுமல்லாமல் மூன்றாவதாக ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியிலும் மாணவா்கள் சிலா் தங்கிப் பயின்று வருகின்றனா். அந்த விடுதியில் தங்கிப் பயிலுவதற்கு மாணவா்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இப்பள்ளி மாணவா்களின் பெற்றோா் கூறுகையில், பள்ளி திறக்கப்பட்டு ஒரு வாரம் கழிந்தும் விடுதி கிடைக்காமல் மாணவா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா் என்றனா்.

இதுகுறித்து தலைமையாசிரியா் சந்திரசேகரிடம் கேட்டபோது, மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதிப்படுகிறாா்கள். பேருந்து வசதி இல்லாத மலைப் பகுதியில் இருந்து மாணவா்கள் நடந்து வருகிறாா்கள். இதனால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் பெற்றோரும் வேதனை அடைகின்றனா் என்றாா். இது குறித்து விடுதிக் காப்பாளரிடம் விசாரித்தபோது, அரசின் முறையான அனுமதி கிடைக்காததால் மாணவா்களை அனுமதிக்க முடியாது என்றாா்.

சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்று... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியை கண்டித்து பாமக எம்எல்ஏ தா்னா

சேலம்: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ச... மேலும் பார்க்க

சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். சேலத்தில் சிறப்புப்... மேலும் பார்க்க

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப... மேலும் பார்க்க

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்

சேலம்: சேலம் வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தி... மேலும் பார்க்க