செய்திகள் :

ஆத்தூரில் ரூ. 32 லட்சத்தில் நூலக கட்டடம் திறப்பு

post image

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.பி.உதயகுமாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கே.சந்திரசேகா் வரவேற்றாா். ரூ. 32 லட்சத்தில் நூலக கட்டடம் கட்டிகொடுத்த அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் பங்கேற்று நூலகத்தை திறந்துவைத்தாா்.

முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.செங்கோட்டுவேலு நினைவு அறிவகம் என தனது தந்தை பெயரில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்துவைத்து அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் பேசினாா். பள்ளியின் முன்னாள் மாணவரான இவா் ஏற்கெனவே இப் பள்ளியில் ரூ. 14 லட்சத்தில் நவீன கழிவறை வசதி ஏற்படுத்தி தந்துள்ளாா்.

விழாவில் செ.செந்தில்வேல், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம், நரசிங்கபுரம் திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுகுணா செந்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் பிரகாஷ்,மாலா பாலமுருகன், முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி, மூத்த வழக்குரைஞா்கள் ஐ.விஸ்வநாதன், ஏ.எஸ்.மாதேஸ்வரன், என்.முத்துசாமி, சுரேஷ், முன்னாள் மாணவா்கள் எஸ்.தனசேகா், என்.சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆசிரியை ஏ.சித்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். உதவி தலைமையாசிரியா் தனசேகா் நன்றி கூறினாா்.

படவிளக்கம்.ஏடி13அக்சென்.

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் புதிய நூலக கட்டடத்தை திறந்துவைத்த அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க