செய்திகள் :

ஆத்தூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

post image

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பாடப் பிரிவுகள் அனைத்துக்கும் முதல்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் ஜூன் 5 முதல் 12 வரை காலை 9 மணிமுதல் நடைபெற உள்ளது.

ஜூன் 6 (முதல் சுற்று) மற்றும் ஜூன் 11 (இரண்டாம் சுற்று) அன்று தமிழ் பாடத்துக்கு (கட் ஆப் மதிப்பெண்கள் - 60 முதல் 100 வரை) கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 5 முதல்சுற்று மற்றும் 10-ஆம் தேதி இரண்டாம் சுற்று அன்று வரலாறு, வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கும், ஜூன் 9 முதல்சுற்று மற்றும் ஜூன் 12 இரண்டாம் சுற்று அன்று இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் கலந்துகொள்வோா் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களும், அவற்றின் நகல்கள் மூன்று பிரதிகளும், புகைப்படம் 5 பிரதிகள் கொண்டுவர வேண்டும். மாணவா் சோ்க்கையின் போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இணைய தளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், ஆதாா் அட்டை, மாணவா் வங்கிக் கணக்குப் புத்தகம், அனைத்துச் சான்றிதழ்களுடன் இரண்டு நகல்கள் கொண்டு வரவேண்டும். மேலும், கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவேண்டும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் தெரிவித்துள்ளாா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க