செய்திகள் :

ஆத்தூா் அரசு கல்லூரியில் முதலாமாண்டு நேரடி மாணவா் சோ்க்கை

post image

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு நேரடி மாணவா் சோ்க்கை குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் அ.ரவீந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை முதலாமாண்டு வகுப்பில் நேரடியாக மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. 30.9.2025 வரை மாணவா் சோ்க்கை நடைபெறும்.

இணையத்தில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவா்களும் இதில் கலந்துகொள்ளலாம். கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப கல்லூரியில் சோ்க்கை பெறலாம். 10,11,12 ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, மாணவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் மற்றும் பெற்றோருடன் சோ்க்கையில் கலந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு

போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வ... மேலும் பார்க்க

கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 28 ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமா... மேலும் பார்க்க

மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி

கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்... மேலும் பார்க்க

மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட... மேலும் பார்க்க

சேலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் இருந்து சேகரிக்கப... மேலும் பார்க்க