செய்திகள் :

நேபாள வன்முறையில் 51 பேர் பலி! 1,300 பேர் காயம்!

post image

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராகவும் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராகவும் அந்த நாட்டு இளைஞா்கள் கடந்த திங்கள்கிழமை தீவிர போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களை காவல்துறை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறையில் 19 இளைஞர்கள் இறந்தனர்.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா் மற்றும் பிரதமா் இல்லங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இதுதவிர முன்னாள் பிரதமா்கள், அமைச்சா்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

நேபாளத்தில் இடைக்கால பிரதமரை நியமிக்கும் பணியில் இளைஞர் போராட்டக்குழு ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக ஆவார் என்று கூறப்படுகிறது.

இதற்காக ராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தற்போது அங்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வன்முறையில் சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் சுமார் 12,500 சிறைக் கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Nepal Gen Z protests: Death toll hits 51, 12k+ prisoners at large

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள... மேலும் பார்க்க

நேபாள கலவரத்தில் இந்திய பெண் பலி!

நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற காஜியாபாத்தைச் சேர்ந்த பெண், இளைஞர்களின் கலவரத்தில் பலியானார்.நேபாள அரசுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டத்... மேலும் பார்க்க

மிசோரமில் புதிய ரயில் பாதை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

மிசோரமில் பைராபி-சாய்ரங் அகல ரயில் பாதையையும், ஐஸ்வால் மற்றும் தில்லி இடையேயான முதல் ராஜ்தானிஎக்ஸ்பிரஸ் மற்றும் பிற புதிய ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 2014 ஆம் ஆண்டு பிரதம... மேலும் பார்க்க

ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்

ராமரைப் பின்பற்றாத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஏன் கூட்டணி வைத்துள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.பிகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்பட... மேலும் பார்க்க