செய்திகள் :

நேபாள கலவரத்தில் இந்திய பெண் பலி!

post image

நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற காஜியாபாத்தைச் சேர்ந்த பெண், இளைஞர்களின் கலவரத்தில் பலியானார்.

நேபாள அரசுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

அப்போது, காத்மண்டுவில் உள்ள நட்சத்திர விடுதிக்கு இளைஞர்கள் தீ வைத்ததில், 55 வயதுடைய இந்திய பெண் பலியாகியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் (58) மற்றும் அவரது மனைவி ராஜேஷ் தேவி ஆகியோர் நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளனர்.

காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்காக செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், செப்டம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர விடுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். விடுதி முழுவதும் தீ பரவியதால் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தரை தளத்தில் படுக்கைகளை போட்டு, அனைவரையும் மீட்புப் படையினர் குதிக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

இதில், நான்காவது மாடியில் இருந்து குதித்த ராஜேஷ் தேவி, தலையில் பலத்த காயமடைந்து பலியாகியுள்ளார். அவரது கணவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதனைத் தொடர்ந்து, உ.பி. மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள சோனாலி எல்லை வழியாக ராஜேஷ் தேவியின் உடல் வியாழக்கிழமை காஜியாபாத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இந்த கலவரத்தை தொடர்ந்து காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.

A woman from Ghaziabad, who was on a spiritual pilgrimage to Nepal, was killed in a riot by youths.

இதையும் படிக்க : குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள... மேலும் பார்க்க

நேபாள வன்முறையில் 51 பேர் பலி! 1,300 பேர் காயம்!

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராகவும் ஆட்ச... மேலும் பார்க்க

மிசோரமில் புதிய ரயில் பாதை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

மிசோரமில் பைராபி-சாய்ரங் அகல ரயில் பாதையையும், ஐஸ்வால் மற்றும் தில்லி இடையேயான முதல் ராஜ்தானிஎக்ஸ்பிரஸ் மற்றும் பிற புதிய ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 2014 ஆம் ஆண்டு பிரதம... மேலும் பார்க்க

ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்

ராமரைப் பின்பற்றாத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஏன் கூட்டணி வைத்துள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.பிகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்பட... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை பங்கேற்றார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி உடல்நிலை காரணமாக... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும் மாற்றம்! பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம்!

இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம் என்று கூறி மத்திய அரசு மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ளது. அதன்படி, கடந்த செப். 9 ஆம் தேதி பிசியோதெரபி மருத்த... மேலும் பார்க்க