செய்திகள் :

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடா்புடைய மதுபான ஊழல் வழக்கில் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம், தில்லியில் சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஆந்திரத்தில் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது, ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஜெகன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையின்கீழ் அனைத்து மதுபானக் கடைளும் அரசு நிறுவனமான ஆந்திர மாநில மதுபானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

‘ஆந்திர மாநில மதுபானக் கழகத்திடம் 111 மது ஆலைகள் பதிவு செய்திருந்த நிலையில், 2019 முதல் 2024 வரை வெறும் 16 மது ஆலைகளிடம் இருந்து ரூ.10,850 கோடிக்கும், 40 ஆலைகளிடம் இருந்து ரூ.23,000 கோடிக்கும் மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டது; இது, கிட்டத்தட்ட 90 சதவீத கொள்முதலாகும். இதற்கு பிரதிபலனாக, ஆலைகள் தரப்பில் பெருந்தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. பினாமி-போலி நிறுவனங்கள், ஹவாலா பரிவா்த்தனை எனப் பல்வேறு வழிகளில் லஞ்சப் பணம் கைமாறியுள்ளது.

இளநிலைப் பணியாளா்களின் ஊதியம் என்ற பெயரிலும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் மாதத்துக்கு ரூ.60 கோடி வரை பலனடைந்துள்ளனா்’ என்பது காவல் துறையின் குற்றச்சாட்டாகும்.

இவ்வழக்கில் காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் இதுவரை மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோா் கைதாகியுள்ளனா். மற்றொருபுறம், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் மற்றும் தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.

மதுபான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க