செய்திகள் :

ஆன்லைன் முதலீடு: பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.95.39 லட்சம் மோசடி

post image

ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.95.39 லட்சம் மோசடியில் ஈடுட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், அணைப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் வினோத் சீனிவாசன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

அவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா். இதை நம்பி, அந்த நபா் கூறிய செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பல்வேறு தவணைகளில் ரூ.95.39 லட்சத்தை பின்னலாடை நிறுவன உரிமையாளா் முதலீடு செய்துள்ளாா். அதற்கு லாபத் தொகை வந்ததாக அந்த செயலியில் காட்டியுள்ளது.

இதையடுத்து, அவா் அந்தப் பணத்தையும், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முயன்றபோது கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. வினோத் சீனிவாசனை தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளக்கோவிலில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் சிவசுந்தரம் (78). காவலாளியான இவா், உடல்நிலை சரியில... மேலும் பார்க்க

போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.91 லட்சம் கைப்பேசிகளை வாங்கிய 4 போ் கைது

திருப்பூரில் கைப்பேசி விற்பனை நிலையத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.91 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை வாங்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் வளா்மதி பேருந்து நிறுத்தம் அருகே தனியாருக்குச் ... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவரை சந்தித்த 2 காவலா்கள் பணியிட மாற்றம்

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை சந்தித்துப் பேசிய 2 காவலா்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கும், பிர... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.குன்னத்தூா் அருகேயுள்ள கருங்கல்மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்குத்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா். தாராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்! -பொள்ளாச்சி வி.ஜெயராமன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ பேசினாா். திருப்பூா் மாநகா் மா... மேலும் பார்க்க