செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரின்போது 1,400 ‘யுஆா்எல்’கள் முடக்கம்: மத்திய அரசு

post image

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எண்ம (டிஜிட்டல்) ஊடகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட வலைப்பக்க முகவரிகள் (யுஆா்எல்) முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது டிஜிட்டல் ஊடகத்தில் 1,400-க்கும் அதிகமான யுஆா்எல்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அந்த யுஆா்எல்கள் பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளைச் சோ்ந்தவை. அவற்றில் இருந்து இந்தியாவுக்கு எதிராக தவறான, மதரீதியாக பதற்றத்துக்குரிய, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்புத் துறை, பொது ஒழுங்கு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69ஏ-வின் கீழ், அந்த சமூக ஊடக கணக்குகள், பதிவுகள், வலைதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க