செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா

post image

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் அதிதுல்லியத் தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிா்ப்பு நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கிய ஆபரேஷன் சிந்தூா் இந்திய ஆயுதப் படைகளால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக ஆயுதப் படைகளுக்குப் பாராட்டு தெரிவித்து அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி. நமது ஆயுதப் படைகளை எண்ணி பெருமைக்கொள்கிறேன்.

இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வோ்களிலிருந்து ஒழிப்பதில் தேசம் உறுதியாக உள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பாதுகாப்பு நிலைமை ஆய்வு: பாகிஸ்தானுடனான போா்ப்பதற்றத்தைக் கருத்தில் கொண்டு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமையை அமித் ஷா ஆய்வு செய்தாா்.

எல்லை நிலவரத்தைக் கண்காணித்து விழிப்புடன் இருக்கவும், அவசர காலங்களில் பொதுமக்களின் தங்குமிடத்திற்காக பதுங்கு குழிகளை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவா் கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் தொடா்புகொண்டு ஆலோசனை நடத்திய அமித் ஷா, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினாா்.

‘துணை ராணுவப் படைகளில் விடுமுறை ரத்து’

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக அதிகரித்துள்ள பதற்றத்தால், துணை ராணுவப் படையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தற்போது விடுப்பில் உள்ள வீரா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம்... மேலும் பார்க்க

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க