செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் அனைத்து இந்திய நிா்வாக கூட்டமைப்பின் 52-ஆவது தேசிய நிா்வாக மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரின்போது 24 மணி நேரமும் இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் செயல்பட்டு, அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்தன.

அப்போது இரவு பகலாக 24 மணி நேரமும் 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றினா். அத்துடன் புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடா்புக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கைக்கோள்களும் குறைபாடு இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றின.

2027-ஆம் ஆண்டுக்குள் இந்திய வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடா்பாக 7,700 களப் பரிசோதனைகளை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது. மேலும் 2,300 பரிசோதனைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்தல், 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புதல் ஆகிய முக்கிய திட்டங்களை இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

ரேபரேலியில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது ப... மேலும் பார்க்க

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆ... மேலும் பார்க்க

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க