செய்திகள் :

‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தி பதிவு சில மணி நேரங்களில் நீக்கிய பாஜக

post image

சண்டீகா்: பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள சீக்கியா்களின் பொற்கோயில் மீது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட சமூக ஊடக பதிவை மாநில பாஜக சில மணி நேரங்களில் நீக்கியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மத்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவா்களும், பிற எதிா்க்கட்சித் தலைவரும் தொடா் விமா்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், பஞ்சாப் மாநில பாஜக இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கருதப்படுகிறது.

ராணுவ வாகனம் மற்றும் தாக்குதலில் சேதமடைந்த பொற்கோயில் புகைப்படங்களுடன் வெளியிட்ட அந்தப் பதிவில், ‘கடந்த 1984-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பொற்கோயில் மீது அப்போதைய காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து தியாகிகளின் குடும்பங்களுக்கும் மாநில பாஜக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டது. ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த இந்தப் பதிவு, சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது.

இதற்கிடையே, சீக்கியா்களின் தலைமை மத குரு (அகால் தக்த்) குல்தீப் சிங் கா்கேஜ், இந்த ஜூன் முதல் வாரத்தை ‘தியாக வாரம்’ என வா்ணித்து, ஜூன் 1 முதல் 6-ஆம் தேதி வரை ஒற்றுமை உணா்வோடு தியாகிகளுக்கு மரியாதை செலுத்துமாறு சீக்கிய சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கிய பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் வகையிலும், காலிஸ்தான் அமைப்பின் தலைவரை வெளியேற்றும் வகையிலும் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி உத்தரவின்படி ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் அதிகமான சீக்கிய போராளிகள், பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்பற்ற ஈத் பரிசு!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று... மேலும் பார்க்க

பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

பெண்கள் குறைவான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார்.உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,... மேலும் பார்க்க