செய்திகள் :

ஆப்கானிஸ்தான் டு டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன் - என்ன நடந்தது?

post image

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குண்டுஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 13 சிறுவன் ஈரானுக்கு பயணம் செய்ய நினைத்து, யாருக்கும் தெரியாமல் காபூல் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கே பயணிகளுடன் கலந்து, விமானம் அருகே சென்றதும் அடியில் உள்ள லேண்டிங் கியர் இருக்கும் அறையில் பதுங்கியுள்ளார். விமானமும் பறக்கத்தொடங்கியுள்ளது. ஆனால் அது அவர் எண்ணியதுபோல தெஹ்ரானுக்கு செல்லும் விமானம் அல்ல, டெல்லிக்கு வருவது!

ஆப்கானிஸ்தான் டூ டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன்
ஆப்கானிஸ்தான் டூ டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன்

அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி 90 நிமிடங்களுக்கும் மேலாக விமானத்தின் சக்கரங்களுக்கு இடையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை விமான நிலைய ஊழியர்கள் பார்த்துள்ளனர். மாலையிலேயே காபூல் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு சாகசமான நாள் முடிவுக்கு வந்தது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அதிகாரி கூறுவதன்படி, செப்டம்பர் 22ம் தேதி காலை 10:30 மணியளவில் கேஏஎம் ஏர் காபூல்-டெல்லி விமானத்தில் (RQ4401) வந்திறங்கியிருக்கிறார் அந்த சிறுவன். அவரை விசாரித்ததில் விமானத்தின் பின்புறமுள்ள சக்கரங்களுக்கு நடுவே அமைர்ந்து வந்தது தெரியவர, விமானத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.

அந்த சிறுவன் ஆப்கானில் இருந்து வரும்போது ஒரு சிகப்பு நிற ஸ்பீக்கரை மட்டும் எடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரை குடியேற்ற அதிகாரிகளிடம் அனுப்பி, விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

மாலை 4 மணிக்கு கேஏஎம் ஏர் ஃப்ளைட் RQ4402 விமானத்தில் காபூலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒரு கமர்ஷியல் விமானம் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும். குளிர் -50 டிகிரி வரைக் கூட செல்லும், விமானத்துக்குள் இல்லாவிட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்க நேரிடும்.

விமான சக்கரப் பகுதியில் (landing gear compartment) உட்கார்ந்து பாதுகாப்பாகப் பறப்பது இயல்பாகவே மிக அபாயகரமானதும், பெரும்பாலும் சாத்தியமற்றதும் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சக்கரத்தில் அமர்ந்து பறப்பவர்கள் 77% மரணிக்கின்றனர்.

கேரளா: ``அது என் வேலை அல்ல" - அமைச்சர் சுரேஷ் கோபி! - வைரல் வீடியோவின் பின்னணி?

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பொது நிகழ்ச்சியில் ஒரு முதியவரின் கோரிக்கையை நிராகரித்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக பதவிவகிப்ப... மேலும் பார்க்க

எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்து - பரவும் வீடியோ!

புதிய கார் வாங்குவது இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு மிகப் பெரிய சாதனைதான். அப்படித்தான் அதீத சந்தோஷத்துடன் தனது மகிந்திரா தார் காரை வாங்கியிருக்கிறார் 29 வயதான மானி பவார். சாலைக்கு கொண்டுசெல்லப்படும் ம... மேலும் பார்க்க

Red Moon: `ரத்த நிலவு' இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம்:இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான்... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்

சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.இதற்கிடையில், “தெருநாய்களுக... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி

இந்தியாவில் தெருநாய்கள் அதிகரித்து வருவது, தெருநாய் கடி காரணமாக உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெருநாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்கள... மேலும் பார்க்க

Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.தொடர்ந்த தாக்குதல்களால் காசா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க