மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு
ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ஜெ. நாராயணன் தலைமை வகித்து பேசினாா். வட்டாட்சியா் ரேவதி வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாழ்த்தி பேசினாா்.
31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் பாஸ்கரன், வனச்சரக அலுவலா் பாபு, வருவாய் ஆய்வாளா்கள் அமீன், நித்யானந்தம், ஜமுனா, புகழேந்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் கோவிந்தசாமி, செந்தில், காதா், ராஜ்குமாா், விஜயபிரபாகா், அபிராஜி, ரஞ்சித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.