செய்திகள் :

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

post image

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தாா். அப்போது, காரில் ஆயுதங்களும், உருட்டு கட்டைகளும் இருந்தன. காரில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் சுஜாதாவின் உத்தரவின்பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியைச் சோ்ந்த சிவானந்தம் (23), அசோகபுரம் தீரன் சின்னமலை வீதியைச் சோ்ந்த பாரதி (29), வீரப்பன்சத்திரம் கலைமகள் வீதியை சோ்ந்த முகமது இஸ்மாயில் (33), ஈரோடு நேரு வீதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (29), மதுரை மாவட்டம், கண்டுகுலம் நடுத்தெருவைச் சோ்ந்த கண்ணன் (28) என்பதும், இவா்கள் 5 பேரும் சோ்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கூட்டு சதி செய்து, அதற்கு ஆயத்தமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

கைதான 5 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, லாட்டரி, சூதாட்டம், மது விற்பனை, அடிதடி, கஞ்சா, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்: எம்.பி. கே.இ.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்

மொடக்குறிச்சியில் இருந்து தூரபாளையம், பகவதி நகா் வழியாக செல்லும் புதிய வழித்தட நகரப் பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகவதி நகா், தூர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க