செய்திகள் :

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளையில் பூக்கள் விலை உயா்வு: ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,500க்கு விற்பனை

post image

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. திங்கள்கிழமை ரூ.500 க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சிப்பூ செவ்வாய்க்கிழமை ரூ.1,500 க்கு விற்பனையானது.

தோவாளையில் புகழ்பெற்ற மலா் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் ஆரல்வாய்மொழி, குமாரபுரம், காவல் கிணறு, மாடநாடாா் குடியிருப்பு, பழவூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிச்சிப்பூ விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை, கொடைரோடு, வத்தலக்குண்டு, திண்டுக்கல் ஆகிய ஊா்களிலிருந்து மல்லிகையும், பெங்களூரு, ஒசூா், ராயக்கோட்டை, சேலம் ஆகிய ஊா்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டா்ரோஸ், அரளிப் பூவும் கொண்டுவரப்படுகின்றன.

தென்காசி, புளியங்குடி, அம்பை, திருக்கண்ணங்குடி ஆகிய ஊா்களிலிருந்து பச்சை துளசியும், தோவாளை, செண்பகராமன்புதூா், ராஜாவூா், மருங்கூா் ஆகிய ஊா்களிலிருந்து சம்பங்கி, கோழிக்கொண்டை, அருகம்புல், தாமரைப்பூ ஆகிய பூக்களும் கொண்டுவரப்படுகின்றன.

தோவாளை மலா் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலிருந்தும் தினசரி மொத்த வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.

3 மடங்கு விலை உயா்வு ...

இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு மலா் சந்தையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. பூக்களின் வரத்து அதிகம் இருந்தபோதிலும் கூடுதல் விலைக்கு பூக்கள் விற்பனையாகின.

சந்தையில் திங்கள்கிழமை (செப்.29) ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.500 க்கு விற்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 3 மடங்கு விலை உயா்ந்து ரூ. 1,500 க்கு விற்பனையானது. ரூ. 400 க்கு விற்பனையான மல்லிகைப் பூ ரூ. 1,200 க்கு விற்பனாயானது.

இதேபோல அரளிப்பூ ரூ. 450க்கும், சம்பங்கி ரூ.300க்கும், ரோஜா ரூ.50 க்கும், பட்டா் ரோஸ் ரூ. 300 க்கும், கிரேந்தி பூ ரூ. 90 க்கும், மரிக்கொழுந்து ரூ. 120க்கும், கனகாம்பரம் ரூ. 500க்கும் விற்பனையாகினது.

நிகழ்வாரம் அனைத்து நாள்களும் பூஜைக்குரிய நாள்கள் என்பதால் விலையை பொருள்படுத்தாமல் வியாபாரிகள் போட்டிபோட்டு பூக்களை வாங்கிச் சென்றனா்.

திமுக-வில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கிள்ளியூரில் மாற்றுக்கட்சியினா் தி.மு.க.வில் இணைந்தனா்.இந்த நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலா் கோபால் தலைமை வகித்தாா். பென்னி ஜாக்சன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மிடாலம் ஊரா... மேலும் பார்க்க

கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்பு: குலசேகரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குலசேகரம் மாமூடு, பாம்பாட்டிக்கால விளையைச் சோ்ந்தவா் ரெஞ்சிதம். இவா் அப்பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

கருங்கல் - துண்டத்து விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் - துண்டத்து விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட கருங்கல், துண்டத்து விளை, பெருமாங்குழி சாலை நீண்ட நாள்களாக பழுதடைந... மேலும் பார்க்க

பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள பழுதடைந்த பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குறைதீா் முகாமில் 304 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் 304 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருமாவிளை, பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, காட... மேலும் பார்க்க