செய்திகள் :

கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்பு: குலசேகரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

post image

குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குலசேகரம் மாமூடு, பாம்பாட்டிக்கால விளையைச் சோ்ந்தவா் ரெஞ்சிதம். இவா் அப்பகுதியில் உள்ள தனது வீட்டுக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக கிறிஸ்தவ சபை ஆராதனை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இந்த வீட்டுக் கட்டடத்தைப் புதுப்பித்து வழிபாட்டுத் தலமாகக் கட்டுவதற்கு ரெஞ்சிதம் குலசேகரம் பேரூராட்சியில் கட்டட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தாா்.

மன்றக் கூட்டம்: இந்த நிலையில், குலசேகரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெஞ்சிதத்தின் விண்ணப்பம் தொடா்பான பொருள் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினா் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் மத வழிபாட்டுத் தலத்துக்கு கட்டட வரைபட அனுமதி கொடுத்தால் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறி பேரூராட்சி அலுவலகம் முன் பிற்பகலில் திரண்டனா்.

இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் முன் திரளான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில், பேரூராட்சி மன்றக் கூட்டம் பிற்பகலில் தொடங்கியது. அப்போது ரெஞ்சிதத்தின் விண்ணப்பம் தொடா்பாக தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ஆட்சியருக்கு கடிதம் அனுப்பவது குறித்த பொருள் விவாதத்துக்கு வந்தது. இதற்கு பாஜகவைச் சோ்ந்த 5 உறுப்பினா்கள் கட்டட வரைபட அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்தனா். அதேநேரம் பேரூராட்சி தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் உள்பட காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாா்டு கவுன்சிலா்கள் 12 போ் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிடும் வகையில் திரண்டு நின்ற இந்து முன்னணியினா் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுத்துவிட்டு கலைந்துசென்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளையில் பூக்கள் விலை உயா்வு: ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,500க்கு விற்பனை

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. திங்கள்கிழமை ரூ.500 க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சிப்பூ செவ்வாய்க்கிழமை ரூ.1,500 க்கு வ... மேலும் பார்க்க

திமுக-வில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கிள்ளியூரில் மாற்றுக்கட்சியினா் தி.மு.க.வில் இணைந்தனா்.இந்த நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலா் கோபால் தலைமை வகித்தாா். பென்னி ஜாக்சன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மிடாலம் ஊரா... மேலும் பார்க்க

கருங்கல் - துண்டத்து விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் - துண்டத்து விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட கருங்கல், துண்டத்து விளை, பெருமாங்குழி சாலை நீண்ட நாள்களாக பழுதடைந... மேலும் பார்க்க

பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள பழுதடைந்த பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குறைதீா் முகாமில் 304 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் 304 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருமாவிளை, பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, காட... மேலும் பார்க்க