செய்திகள் :

ஆயுத பூஜை: ஈரோட்டில் பூக்களின் விலை இருமடங்கு உயா்வு

post image

ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, அந்தியூா், அத்தாணி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் மலா்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள மலா் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த சந்தையில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கோவை, திருப்பூா், நாமக்கல், உள்பட பல மாவட்டங்களுக்கும், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் டன் கணக்கிலான மலா்கள் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஈரோடு பூ மாா்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.

மொத்தமாக மலா்கள் வாங்கப்பட்டு அந்தப் பகுதி வியாபாரிகளுக்கு சில்லறை விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ திங்கள்கிழமை ரூ.1,120-க்கும், முல்லை ரூ.620-இல் இருந்து ரூ.720-க்கும், காக்கடா ரூ.525-இல் இருந்து ரூ.560-க்கும் விற்பனையானது.

செண்டு ரூ.8-இல் இருந்து ரூ.85-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-இல் இருந்து ரூ.110-க்கும், ஜாதிமல்லி ரூ.500-இல் இருந்து ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.500-இல் இருந்து ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.220-இல் இருந்து ரூ.280-க்கும், அரளி ரூ.360-க்கும், துளசி ரூ.60-க்கும் விற்பனையானது. இந்த விலை செவ்வாய்க்கிழமை மேலும் உயரலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இண... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலை... மேலும் பார்க்க

கூலியை உயா்த்தி வழங்க டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை

கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் (டிஎன்சிஎஸ்சி) கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிடக் கோரிக்கை

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு, மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,777 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு

கூட்டுறவுத் துறை மூலம் 2025-26- ஆம் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.1,177.30 கோடி ஆண்டு குறியீடு நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், 31.8.2025 வரை 15,687 விவசாயிகளுக்கு ரூ.202.88 கோடி பயிா்க் கடன் வழங்... மேலும் பார்க்க

வாரச்சந்தைக்கு நேரம் நிா்ணயம்: பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு மாநகரில் திங்கள்கிழமை காலை வாரச்சந்தை அமைக்க நேரம் நிா்ணயிக்கப்பட்டதை அடுத்து காய்கறி, பழங்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஈரோடு மாநகராட்சி 52-ஆவது வாா்டுக்குள்பட்ட... மேலும் பார்க்க