செய்திகள் :

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

post image

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குமாா் என்பவா், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பித்தாா். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ராஜ்குமாரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசாணை விதிகளில் இடமில்லை. 2023 செப்டம்பரில் அவா் 14 ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்யவில்லை எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ராஜ்குமாா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் அமா்வு, வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரு ஆண்டுகள் தண்டனையை மனுதாரா் ஏற்கெனவே அனுபவித்து விட்டாா். குறைந்த தண்டனையை ஏற்கெனவே அனுபவித்து விட்டால், சம்பந்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டி விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதனை நீதிபதிகள் சுட்டிக்காட்டி, ராஜ்குமாரை விடுதலை செய்ய உத்தரவிட்டனா்.

அதேவேளையில், குறைந்த தண்டனை விதிக்க வகை செய்யும் சில சட்டப் பிரிவுகளில் தண்டிக்கப்பட்டிருந்தால், முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது. முன் கூட்டி விடுதலை செய்ய தகுதி இழப்பு செய்யும் இந்த விதிகளை அரசு மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனா்.

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கவரைப்பேட... மேலும் பார்க்க